தமிழே சிவம்
சிவமே இசை
கோசைநகரான் திருக்கயிலாய வாத்தியக்குழு
என்னுடைய பெயர் கேசைநகரான் சிவ.ச.சிவக்குமார், பின்னர் ( D.E.E.E) தொழிற்கல்வியில் மின்சாரத்துறைப்படித்து மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து 2015 ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகி, தற்போது முழுநேரமாக, இசைக்கருவிகள் கண்காட்சி, பள்ளிகள், கல்லுரிகளில் இசைக்கருவிகள் விளக்கம் என்று வாழ்க்கையின் பாதை மாறிவிட்டது. [ அடியேன் கோயம்பேடு மாநகராட்சி பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரைப்படித்தேன். ]
தற்போது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இசைக்கப்பட்ட இசைக்கருவிகளை 108 வகை என்று வகைப்படுத்தியிருக்கிறோம். அதனை மீட்டெடுத்து இசைக்க வேண்டும் என்ற கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழனாக இருந்தால் தமிழ்முறை திருமணம் செய்வொம்.