பல்லாக்கு ஊர்வலம்
பண்பாளர்களே அறம் நிறைந்து நிரம்ப நிறைய பேருக்கு செய்தவர்களாகவும் அநீதி கொண்டவர்களை நீதி கொண்டவர்களாகவும், நமக்கு நல்லவை நடக்கவில்லை என்றால் நல்லவை நடப்பதற்கும் நடைபோடுவோம் பல்லாக்கில். பண்பாளர்கள் பழுதடைந்து பொகாமல் பல்லாக்கில் செல்வார்கள். பழுதடைந்தவன் பழுது நீக்கி பல்லாக்கில் செல்வான். பண்பாளன் பழுதடையாமல் பல்லாக்கில் செல்வான். இது தான் எங்களின் தமிழர் மரபு.
Read More
அட்டமங்கலம வரவேற்பு
தமிழை சுமந்து திருமணம் செய்பவர் மன்னராக பாவித்து மன்னர்களுக்கு கொடுக்கப்படும் எட்டுவகையான மங்கல பொருட்களை கொண்டு வரவேற்கப்படுகிறது.
Read More
முளைப்பாலிகை
பண்ணியப் பயிரில் புண்ணியம் தெரியும். என்பது ஓளவை பிராட்டியின் வாக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண நாளில் சான்றோர் குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் இயற்கையின் ஒத்துழைப்போடும் இறைவன் திருவருளோடும் நடைபெறவேண்டம் என்று இறைவனிடம் வேண்டி விண்ணப்பம் செய்து பத்து நாட்களுக்கு முன் விதையிட்டு வளர்ந்து ஊர்வலத்தில் கொண்டுவரப்படும் ஆகவே இந்தத் திருமணம் இயற்கையின் முழு ஒத்துழைப்போடும் இறை அருளின் அனுமதியுடன் நடைபெறுகிறது என்பதை ஊர் மக்களுக்கு பறைச்சாற்றுகிறோம்,
Read More
செந்தமிழ் ஆகம அந்தணர்
தென்தமிழாம், தேன்பாகாம், தோடுடைய செவியன் செவிமடுத்த செந்தமிழ் வேதமாம் திருமுறையை ஓதி அம்மையப்பரை எழுந்தருள செய்து அவர்களின் திருவடியில் திருமங்கல நாண் பூட்ட செந்தமிழ் ஆகம அந்தணர்கள் திருவருள் கூட்டுவார்கள்.
Read More
பரிவாரங்கள்
நமது தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் கொடிகளும் பரிவாரங்களாக கொண்டு வரப்படுகிறது.
Read More
ஐந்து வகை தானம்
மணமகன் மணமகளுக்கு வலம்புரி சங்கில் வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத ஐந்து பொருட்களை தானமாக கொடுப்பார்.
Read More
இடைச் சங்கம் முழங்குதல்
தமிழர்களின் வாழ்வில் சங்கு மூன்று இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. அவை முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பதாகும். முதற் சங்கம் நாம் குழந்தையாக பிறந்த உடன் முதன் முறையாக பாலுட்டும் போது சங்கு நாதம் செய்து இருக்க வேண்டும். இடைச் சங்கம் என்பது மணமகள் மங்கல நாண் பூட்டி திருமணம் நடைபெறும் பொது சங்கு நாதம் செய்தலே ஆகும்.
Read More
முரசு அறைதல்
தமிழர்களின் மரபில் முரசு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை ஆனால் இன்று எந்த நிகழ்ச்சியிலும் முரசு இல்லை என்பது இன்றைய வரலாறு. அதனை முறியடிக்கவே முரசு கொட்டி மணமக்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
Read More
மலர் பொழிதல்
"வண்ண மலர்கள் பூமழையாக தூவி வாழ்த்துதல்"
நாணயத்தை பூமலர்களோடு சேர்த்து பூமழையாக பொழிதல் என்பதுதான் மலர்காசு பொழிதல். நாணயம் தவறாமல் இருவரும் வாழ வேண்டும் என்பாதல் நாணயம் பூ மழையாக பொழியப்படுகிறது.
மணப்பெண் அழைப்பு
தாம்பூலத் தட்டில் வண்ணமலர்களை வட்ட வடிவில் அமைத்து, மணமகளான திருமகளின் பாதங்களை அதன் மீது வைத்து அதனை மணமகன் தாங்கி மணப்பெண்ணை அழைத்து வருவதே மணப்பெண் அழைப்பு எனப்படுகிறது.
Read More
அம்மையப்பன் எழுந்தருளல்
திருமணம் என்ற சொல்லிலே திரு இருப்பதால் அதாவது சுவாமி இருப்பதால் இந்த நிகழ்வு சுவாமியின் திருவடியில் நடைபெற வேண்டும் என்பதால் அம்மையப்பனை செந்தமிழ் ஆகம அந்தணர்கள் எழுந்தருள செய்கிறார்கள்
Read More
பழங்கால தமிழிசைக் கருவிகள் இசை
பழங்காலத் தமிழர்கள் இசைக் கருவிகளை நான்காக பிரித்துள்ளனர். அவை தோல் கருவி, காற்று கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி. இவை தவிர உள்ள எந்த கருவியும் தமிழர் மரபு இல்லை. ஆகவே இந்த நான்குவகையான கருவிளும் திருமண நிகழ்வில் இசைக்கப் படுகின்றது.
கலந்து நின்றால் கன்னி காதலனோடும்
கலந்து நின்றால் உயிர் கற்பனையெல்லாம்
கலந்து நின்றால் கலை ஞானங்களெல்லாம்
கலந்து நின்றால் கன்னி கால முக்காலமே.
தமிழ் பண்ணிசைக் கச்சேரி
செந்தமிழின் பண்ணிசையை அனைவரும் தெரிந்து அனுபவிக்க பண்ணிசைக் கச்சேரி ஏழிசை இன்தாமிழால் இசைந்தேத்தும் பாடல்கள் பாடப்படும்.
Read More

